Thursday, 2 January 2014

எத்தனை பேர் அப்பாவிடம் மனம் விட்டு பேசுகிறோம்??




நம்மில் எத்தனை பேர்
 அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்??



சரி,இது ரொம்ப
 கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர்
 அம்மாவிடம் பேசும்
அளவிற்க்கு அப்பாவிடம்
 பேசுகிறோம்???.


அட்லீஸ்ட் அதில்
 பாதி??
ஹ்ம்ம்ம் ,மனம் இந்த
 கேள்வியை ஏற்க்க
 மறுக்கிறதா????


நம் அம்மா கர்பிணியாக இருக்கும்
 பொழுது,அவள் எடுக்கும்
 வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா.


அம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும்
 ஒவ்வொரு பருக்கும் தன்
 குழந்தை செழிப்பாக
 பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம்
 அம்மா கேட்ட அனைத்தும்
 வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர்
 நமக்காக வாழ ஆரம்பிக்கிரார்.


7ஆம் மாதத்தில் தாய் வீடு செல்லும் நம்
 அம்மா ,அப்பா எண்ணும்
 ஒரு ஜீவனை மட்டும்
 பிரிந்து செல்கிறார்,ஆனால்
 அப்பா??, தன் மனைவி மட்டும் தன் வாரிசு என்று இரு உயிர்களை
 பிரிகிறார். அந்த பிரிவு தரும்
 இடைவெளியில்
 ஒவ்வொரு தந்தை அனுபவிக்கும்
 கல்யாணமான ப்ரம்மச்சாரி வாழ்க்கை
 மிகக்கொடுமையானது.


அப்படி பட்ட
 அப்பாவை நாம் இன்னும்
 முழுவதுமாக
 உணரவில்லை என்பதுவே சத்தியமான.உண்மை.


அம்மா, பிரசவ
 ஆஸ்ப்பத்திரியில்.டாக்டர்
“சாரி சார்,ஆபரேஷன்
 பண்ணியாகனும்” ,என்று கூறும்
 பொழுது சுற்றி இருக்கும் சொந்தகள்
 பதற ,நம் அப்பா நமக்காக தன்
 மனைவியையே பணையம்
 வைகிறார்.. அம்மா ஐ.சி.யுவில்
 மறுஜென்மம் எடுக்க ,நம்
 அப்பா நம்மை நம்
 அம்மாவை எண்ணி மனதால்
 மறுஜென்மம் எடுக்கிறார்.


நாம் பிறந்ததும், நம் தந்தை முதலில்
 நம் அம்மாவை தான்
 பார்க்கிறார். “தன்னை நம்பி
 வந்தவளை பணயம்
 வைத்ததிற்க்கு மனதால்
 மன்னிப்பு கேட்க்கிறார்” .நம் அம்மா
“நம்ம பையன
 பாருங்க” ,என்று கூறும்பொழுது அவள்
 சுமை பாதியாக குறைகிறது.


அதன் பின் நம்மை இந்த
 உலகத்திற்க்கு அடையாளாம்
 காட்டுவது நம் அப்பாவின்
 கடமை.அதை அவர் சரியாக
 செய்கிறார்.ஆனால் நாம்
 அவரை சரியாக
 புரிந்து கொள்கிரோமா???.


பருவ வயது வந்ததும் நம் அப்பா சொல்லும் அட்வைஸ் நமக்கு பழிக்கிறது.
சில நேரங்களில் எதிர்த்து பேசும் பிள்ளைகள்,
அப்போது அப்பாவிற்கு ஏற்படும் வலி கொடுமையானது.


தப்பா போனா அப்பா கேட்க தான் செய்வாங்க,
உங்கள் அவப் பெயர்களையும் அவர் தானே சுமக்கிறார்,


அப்பாவை நேசிக்க கற்றுக் கொள்
 தப்பானதை யோசிக்க கற்றுக்கொள்.

உன் மொழி தமிழ் மொழியென்று !!!



தடுக்கி விழுந்தால் மட்டும்
 அ...ஆ...
சிரிக்கும்போது மட்டும்
 இ..ஈ..

சூடு பட்டால் மட்டும்
 உ...ஊ..

அதட்டும்போது மட்டும்
 எ..ஏ...

ஐயத்தின்போதுமட்டும்
 ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்
 ஒ...ஓ...

வக்கணையின்
 போது மட்டும்
 ஒள...

விக்கலின்போது மட்டும்
 ஃ


 என்று தமிழ் பேசி மற்ற
 நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம்
 மறக்காமல் சொல்வோம்
 உன் மொழி தமிழ் மொழியென்று !!!

காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!



காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!


1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ


16-21 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ


22-34 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?


35-49 வயது என்றால் : பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா ..?


50-64 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது


65- வயது மேல் - காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது இந்த வயதில் காதாலா ...? கலிகாலமடா இது.!

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??



சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன


 பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


எவ்வாறு இருக்கும்?


கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.


கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள்.
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.


சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.


நீங்கள் செய்யக் கூடியது எவை?


சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.


சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.


கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.


அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

”ஒரு மூச்சு விடும் நேரம்,” ....??




புத்தர் தன சீடர்களிடம்,

”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்று

கேட்டார்.

ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர்

 அறுபது என்றார்.

மற்றொருவர் ஐம்பது என்றார்.

அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,

சரியான விடையை அவரே சொல்லும்படி

 அனைத்து சீடர்களும் வேண்டினர்.

புத்தர் புன் முறுவலுடன் சொன்னார்,

”ஒரு மூச்சு விடும் நேரம்,”என்றார்.

சீடர்கள் வியப்படைந்தனர்.

”மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?”

என்றனர்.”

உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.

ஆனால் வாழ்வு என்பது மூச்சு

 விடுவதில்தான் உள்ளது.

ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.

அந்தக் கணத்தில் முழுமையாக

 வாழ வேண்டும்.”என்றார் புத்தர்.

ஆம்,நண்பர்களே.,

பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள்.

பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள்.

நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.

அதை முழுமையாக வாழ வேண்டும்.

ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!





ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!

1.நோ ஐடியா (no idea)

 2.நண்பர்களாக இருக்கலாம்

3.செருப்பு பிஞ்சிடும்

4.நான் காதலை வெறுக்கிறேன்

5.நான் உன்னை வெறுக்கிறேன்

6.பெற்றோர் திட்டுவாங்க

7.காதலில் நம்பிக்கை இல்லை

8.யோசிக்க நேரம் வேண்டும்

9.உங்களோட மாத வருமானம் என்ன?

10.மன்னிக்கவும் அண்ணா

11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்.

12.நீங்க எனக்கு அப்பா மாதிரி.